E   |   සි   |  

2016 மே 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’  :  நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளங்கள், மண்சரிவுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு சபை ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறது
‘B’  :  பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் பிரித் பாராயண நிகழ்வு
‘C’  :  அனைத்து பாராளுமன்ற சங்க கூட்டத்தை பிற்போடல்
‘D’  :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2015 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கையும் ஆண்டுக் கணக்குகளும்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ செல்வம் அடைக்கலநாதன்                   
(ii) கௌரவ பந்துல லால் பண்டாரிகொட                   
(iii) கௌரவ ச. வியாழேந்திரன்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


ஒத்திவைப்புப் பிரேரணை

கௌரவ நலின் பண்டாற ஜயமஹ அவர்களால் 2016.05.17 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “ஸ்ரீலங்கன் எயார்லைன் லிமிடெடின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்காலம்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 மே 19ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks