04

E   |   සි   |  

 திகதி: 2018-07-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0430/2018: Repairing Agricultural Wells

430/ '18

கௌரவ இஷாக் ரஹுமான்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) அநுராதபுரம் மாவட்டத்தில் வாழ்கின்ற,

(i) பலர் வருடத்தில் அதிக காலம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களாவர் என்பதையும்;

(ii) விவசாயத்துக்கான நீரைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயக் கிணறுகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும்;

(iii) மேற்படி விவசாயக் கிணறுகள் நீண்ட காலமாக மறுசீரமைக்கப்படாததன் காரணமாக சிதைவடையும் நிலையை அல்லது நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி விவசாயக் கிணறுகளை மறுசீரமைப்பதற்கான ஏதேனுமொரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டத்தைச் செயற்படுத்தும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-20

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks