பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
217/ '18
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு ,—
(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள 11 குளங்களைச் சார்ந்ததாக ஏறக்குறைய 750 குடும்பங்கள் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனரென்பதையும்;
(ii) அண்மையிலிருந்து நிலவிவருகின்ற கடும் வறட்சி காரணமாக இந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றாகவே இழக்கப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இந்த மக்களின் வாழ்வாதாரம் பற்றிக் கவனம்செலுத்தி ஏதேனும் நட்டஈட்டினை வழங்கக்கூடிய இயலுமை உள்ளதா;
(ii) ஆமெனில் வழங்கக்கூடிய நிவாரணம் யாது
(iii) அந்த நிவாரணம் வழங்கப்படும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-19
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks