01

E   |   සි   |  

 திகதி: 2010-11-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0565/2010: Promotions of Teachers in Matara District

0565/ ’10 4. கெளரவ புத்திக பத்திரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1) (அ) (i) 2004/14 உச்சம மட்டத்தில் தேங்கி நிற்றலிலான அநுகூலச் சுற்றறிக்கை, 2005/04 பதவியுயர்வுச் சுற்றறிக்கை மற்றும் 2008/45 பட்டப்படிப்பு பட்டமின்றியுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்குதல் ஆகிய சுற்றறிக்கைகளின் பிரகாரம் மாத்தறை மாவட்டத்தின் நான்கு கல்வி வலயங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டன என்பதையும், (ii) இதனோடு தொடர்புடைய நிலுவைச் சம்பளம் இற்றைவரை செலுத்தப்பட வில்லை என்பதையும் அவர் அறிவாரா? (ஆ) (i) 2004/14, 2005/04 மற்றும் 2008/45 சுற்றறிக்கைகளுக்கிணங்க பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கிணங்க நிலுவைச் சம்பளம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும், (ii) இத்தருணமாகும் போது நிலுவைச் சம்பளம் கிடைக்க வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும், (iii) நிலுவைச்சம்பளம் அவர்களுக்கு செலுத்த வேண்டிய மொத்தப் பணத்தொகை எவ்வளவென்பதையும், (iv) இற்றைவரை நிலுவைச் சம்பளம் செலுத்தப்படாமைக்கான காரணம் யாதென்பதையும், (v) நிலுவைச் சம்பளம் செலுத்தி முடிக்கப்படும் திகதி யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-11-12

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks