04

E   |   සි   |  

 திகதி: 2010-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0414/2010: Heyarfark Estate Kandy

0414/ ‘10

கெளரவ ரீ.ரஞ்சித் த சொய்சா,— அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான  கண்டி, மெத தும்பரயில் அமைந்துள்ள ஹெயார்பாக் தோட்டத்தில் 976.75 ஹெக்ரயர் கொண்ட காணி களனி, வனவாசல புனஸ்ரா கிறீன் கார்டன் கம்பனியின் பணிப்பாளர் மஞ்சுல குணவர்தன என்பவருக்கு 2 மில்லியன் ரூபாவுக்கு குத்தகையில் விடப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) சம்பந்தப்பட்ட உடன்படிக்கைக்கு அரசின் விலை மதிப்பீட்டு அறிக்கையும், அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) சம்பந்தப்பட்ட குத்தகையாளர் குத்தகை உடன்படிக்கைக்கு அமைவாக நடந்துகொண்டுள்ளாரா என்பதையும்,

(iii) அவ்வாறின்றேல் அதற்கெதிராக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்,

(iv) குத்தகையாளர் சட்டபூர்வமாக நடந்துகொண்டிருக்காவிடின் சம்பந்தப்பட்ட உடன்படிக்கையை இரத்துச் செய்து காணியை மீண்டும் அரசுக்கு பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

(v) அவ்வாறு சட்டபூர்வமாக நடந்துகொண்டிருக்காவிடின் அது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யாரென்பதையும்,

(vi) அவர்கள் தொடா்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-20

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks