01

E   |   සි   |  

 திகதி: 2017-07-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1152/2017: மீகஹதென்ன, கும்பதுவ பிரதேசக் கற்குழிகள்: சுற்றாடல் பாதிப்பு

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குச் சொந்தமான மீகஹதென்ன, கும்பதூவ பிரதேசத்தில் 02 கற்குழிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதையும்;

(ii) அதன் மூலம் சுற்றாடலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும்;

(iii) மேற்படி கற்குழிகள் காரணமாக அருகிலுள்ள பெருந்தொகையான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கற்குழி உரிமையாளர்களால் அருகிலுள்ள வயல்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) பிரதேச வாசிகள் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்திருந்தபோதிலும், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மேற்படி இரண்டு கற்குழிகளின் உரிமங்களை இரத்துச் செய்யாதிருப்பதற்கான காரணம் யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-25

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-07-25

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks