01

E   |   සි   |  

 திகதி: 2017-01-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1013/2017: கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன் தொழிற்பாடுகளை மேற்கொள்ளும் கம்பனிகள் : விபரம்

1013/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் தொழிற்பாடுகளை மேற்கொள்கின்ற கம்பனிகள் யாவை என்பதையும்;

(ii) SAGT கம்பனிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iii) அந்த உடன்படிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iv) CICT கம்பனிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட திகதி யாதென்பதையும்;

(v) அந்த உடன்படிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(vi) ​கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் தொழிற்பாடுகளை மேற்படி தனியார் கம்பனிகளுக்கு கையளிப்பதில் தாக்கம் செலுத்திய காரணிகள் யாவையென்பதையும்;

(vii) 1998 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரையில் இலங்கை துறைமுக அதிகாரசபை, SAGT கம்பனி மற்றும் CICT கம்பனி ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட கொள்கலன் தொழிற்பாடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டு அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(viii) மொத்த கொள்கலன் தொழிற்பாடுகளில், ஒவ்வொரு கம்பனியும் மேற்கொண்ட தொழிற்பாடுகளின் எண்ணிக்கையின் சதவீதம் ஆண்டு அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-24

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-01-24

பதில் அளித்தார்

கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks