04

E   |   සි   |  

 திகதி: 2016-11-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0951/2016: திவுலபிட்டிய தேர்தல் தொகுதியிலுள்ள அரச காணிகள் : விபரம்

951/'16

கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) திவுலபிட்டிய தொகுதியில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளின் பரப்பளவு எவ்வளவு;

(ii) மேற்படி ஒவ்வொரு காணியும் சொந்தமாயுள்ள நிறுவனம் வெவ்வேறாக யாது;

(iii) முதலீட்டு நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு எவ்வளவு;

(iv) குடியிருப்பதற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள அல்லது கையளிக்கப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு எவ்வளவு;

(v) எதிர்காலத்தில் குத்தகைக்கு வழங்குவதற்கு அல்லது கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு எவ்வளவு;

(vi) குறை உபயோக காணிகளிருப்பின், அவற்றை முழுமையாக உபயோகிப்பதற்கான வேலைத்திட்டமொன்று அமைச்சுக்கு உள்ளதா;

(vii) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-26

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-02-07

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks