பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2016-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0864/2016: திரு. சந்தன பெல்பிட்ட : நிதி மோசடிகள்

864/ '16

 

கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவராக திரு. சந்தன பெல்பிட்ட சேவையாற்றுகின்றாரா என்பதையும்;

(ii) ஆமெனில், இவரது சம்பளம், கொடுப்பனவுகள், வழங்கப்பட்டுள்ள வாகனங் களுக்கான மாதாந்த வாடகை ஆகியன தனித்தனியே யாது என்பதையும்;

(iii) சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் 2015 நவம்பர் 06 ஆம் திகதியிடப்பட்ட PCI/52/2015 ஆம் இலக்க மனுவின் கீழ் கமத்தொழில் அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திரு. சந்தன பெல்பிட்ட இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தானத்தின் பிரதிப் பொது முகாமையாளராக சேவையாற்றிய காலத்தில் மேற்கொண்டுள்ள பாரிய நிதி மோசடிகள் யாவை என்பதையும்;

(v) மேற்படி நிதி மோசடிகள் தொடர்பிலான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகள் யாவை என்பதையும்;

(vi) மேற்படி சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட்ட திகதி யாது என்பதையும்;

(vii) சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படவில்லை எனின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-10-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-02-07

பதில் அளித்தார்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks