04

E   |   සි   |  

 திகதி: 2016-12-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0836/2016: சட்ட விரோத மதுபானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள்: விபரம்

836/'16

கௌரவ புத்திக பத்திறண,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சட்ட விரோத மதுபானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) அதன்போது கைப்பற்றப்பட்ட மதுபான வகைகளின் அளவு வெவ்வேறாக லீட்டர்களில் எவ்வளவு;

(iii) கைது செய்யப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையான பின்னர் மீண்டும் மதுபான வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர் என்பதையும்;

(ii) இந்நிலைமை ஏற்படுவதற்கு, தண்டனை போதியதாக இல்லாமை மற்றும் இந்த ஆட்களை வேறு பொருளாதார வழிமுறைகளில் ஈடுபடுத்துவதற்கான முறையியலொன்று இல்லாமை மேலே (i) இன் நிலைமை ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாகும் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) (i) சட்ட விரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபடும் ஆட்களை இவ் வியாபாரத்திலிருந்து அகற்றுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், அவ்வழிவகைகள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-12-06

பதில் அளித்தார்

கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks