04

E   |   සි   |  

 திகதி: 2016-09-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0787/2016: Paddy storage facility in Marandagamula

787/ '16

கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத்,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) கடந்த அரசாங்கத்தின் வாழ்வின் எழுச்சி கருத்திட்டத்தின் மூலம் ரூபா 100 மில்லியன் செலவில் மரதகஹமுலவில் 5 ஏக்கர் காணியில் சுமார் ரூபா 100 கோடி பெறுமதியான நெற் தொகையை களஞ்சியப்படுத்தக் கூடிய நெற் களஞ்சியத் தொகுதியொன்று அமைக்கப்பட்டதென்பதை அவர் அறிவாரா;

(ஆ) (i) தற்போது இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற் தொகையின் அளவு எவ்வளவு;

(ii) இக்களஞ்சியத்துடன் இணைந்து செயலாற்றுகின்ற வர்த்தகர்களின் எண்ணிக்கை யாது;

(iii) களஞ்சியத்தில் அரிசி விற்பனை நடவடிக்கைகள் தொடர்பாக வர்த்தக சங்கத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதா;

(iv) இங்கு இறுதியாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெற்தொகை எவ்வளவு;

(v) இந்த நெற் தொகைகள் யாருக்கு எந்த காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது;

(vi) இக்களஞ்சியத்திலிருந்து முழுப் பயனைப் பெற்றுக் கொள்வதற்கானதொரு வேலைத்திட்டம் உள்ளதா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-20

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks