04

E   |   සි   |  

 திகதி: 2016-08-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0722/2016: Paddy Fields, Tanks and other irrigation projects damaged by the floods of May 2016

722/'16

 

கெளரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட திடீர் வௌ்ளம் காரணமாக சேதத்துக்குள்ளான பயிர்ச் செய்கைகளுடன்கூடிய வயற்காணிகளின் பரப்பளவு எத்தனை ஹெக்டயார்கள் என்பதையும்;

(ii) மேற்படி சேதத்தினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் அண்ணளவாக எவ்வளவென்பதையும்;

(iii) சிறு குளங்கள் உட்பட சேதமடைந்துள்ள நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நீர்ப்பாசன கருத்திட்டங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) எதிர்காலத்தில் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மேற்படி வௌ்ளப் பாதிப்பு தாக்கங்களை ஏற்படுத்துமா என்பதையும்;

(ii) பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்ப​தையும்;

(iii) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-26

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks