02

E   |   සි   |  

 திகதி: 2016-06-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0555/2016: Compensation for Mssrs. Hanifa and Salahudeen

555/ '16

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) குருநாகல் பிரதான வீதியை விஸ்தரிக்கின்ற கருத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டபோது கல்ஹின்ன, கண்டி வீதி இல.262/2 இல் வசிக்கும் ஏ.எச்.எம். ஹனிபா மற்றும் யூ.எம்.ஏ.எல். சலாஹுதீன் ஆகியோருக்குச் சொந்தமான மு.பீ.க. 2285 இல் 101 ஆம் இலக்க துண்டுத் தனியார்க் காணி 1306/37 ஆம் இலக்க 2003.09.19 ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலின் மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) 10 வருடங்களுக்கு முன்னர் சுவீகரிக்கப்பட்ட மேற்படி காணிக்கும் உடைத்து அகற்றப்பட்ட வியாபாரக் கட்டடத்திற்குமான இழப்பீட்டுத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி காணி மற்றும் உடைத்து அகற்றப்பட்ட கட்டடத்திற்குரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-09

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks