02

E   |   සි   |  

 திகதி: 2016-07-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0384/2016: இலங்கை மின்சார சபைக்கு மின்மாற்றிகளைப் பெறல் : கேள்வி நடைமுறை

384/ '15

 

கௌரவ புத்திக பத்திறண,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை மின்சார சபைக்குத் தேவையான மின்மாற்றிகளைப் பெற்றுக் கொள்ளும்போது கேள்விப்பத்திரங்கள் கோரப்படுகின்றனவா என்பதையும்;

(ii) ஆமெனில், கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டபோது முன்வந்த நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக யாவையென்பதையும்;

(iii) மேற்படி நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விப்பத்திரங்களின் பெறுமதி தனித்தனியாக யாதென்பதையும்;

(iv) மேற்படி நிறுவனங்களில் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக யாவையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) தற்போது இலங்கை மின்சார சபைக்கு மின்மாற்றிகளை வழங்கும் நிறுவனம் யாதென்பதையும்;

(ii) அந்த நிறுவனத்தின் உரிமையாளர்/ உரிமையாளர்கள் மற்றும்/ அல்லது பணிப்பாளர் சபையினர் யாவர் என்பதையும்;

(iii) இவர்கள் இலங்கை மின்சார சபையில் வகிக்கின்ற பதவிகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மின்மாற்றிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் கேள்விப்பத்திரம் கோரப்படவுள்ள திகதி யாதென்பதையும்;

(ii) அதன்போது ஏனைய கேள்விப்பத்திரதாரர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-22

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-02-08

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks