04

E   |   සි   |  

 திகதி: 2016-03-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0371/2016: Allowance for Pre-school teachers from Interim Budget 2015

371/ ’15

 

கௌரவ ரி. ரஞ்ஜித் த சொய்ஸா,— கல்வி அமைச்சரைக்கேட்பதற்கு,— 

(அ)     (i)     தற்போது நாட்டின் ஒவ்வொரு மாகாண சபை ஆளுகைப் பிரதேசத்தினுள்ளும் உள்ள பதிவு செய்யப்பட்ட மொத்த முன்பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) மேற்படி முன்பள்ளிகளில் 50 பிள்ளைகளுக்கு மேலுள்ள முன்பள்ளிகளின்  எண்ணிக்கை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2015 பெப்புருவரி மாதம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள ரூபா 250/= கொடுப்பனவை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தப் பணத் தொகை எவ்வளவு;

(ii) மேற்படி கொடுப்பனவை பெறுவதற்கு தகைமை பெற்றுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(iii) தற்போது மேற்படி மாதாந்தக் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2016-03-10

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks