04

E   |   සි   |  

 திகதி: 2016-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0370/2016: Fertilizer shortage 2015

370/ '15

கெளரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட மொத்த ஹெக்ரெயார் அளவு எவ்வளவு என்பதையும்.;

(ii) மேற்படி நிலப்பரப்புக்கு ஏற்ற போதுமானளவு உரம் நாட்டில் இருந்ததா என்பதையும்;

(iii) ஆமெனில், உரப்பற்றாக்குறைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) நெற்செய்கைக்கு பயன்படுத்த வேண்டிய ஆரம்ப NPK மேற்பரப்பு உரம் விவசாயிகளால் பெற்றுக்கொள்வதற்கு சந்தையில் இருக்கவில்லை என்பதையும்;

(ii) இரண்டாம் தடவையாக பயன்படுத்த வேண்டிய யூரியா உரத்தைப் பற்றாக்குறையின்றி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததா என்பதையும்;

(iii) அதற்கு எவ்வளவு காலம் எடுத்தது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-03-09

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks