04

E   |   සි   |  

 திகதி: 2015-12-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0278/2015: Port City Project Recommencement

278/ '15

 

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட துறைமுக நகரக் கருத்திட்டம் அமுல்படுத்தப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கென புதிதாக சாத்தியக்கூற்று அறிக்கையொன்று பெற்றுக்கொள்ளப்படுமா என்பதையும்;

(iii) மேற்படி கருத்திட்டத்துக்கு மீண்டும் கேள்விப்பத்திரம் கோரல் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(iv) ஆமெனில், முன்னைய கம்பனியினால் இதற்கு விண்ணப்பிக்க முடியுமா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் மூலம் எமது நாட்டுக்கு கிடைக்கும் பயன்கள் யாவை என்பதையும்;

(ii) கருத்திட்ட நிர்மாணிப்புகளிலிருந்து பொதுமக்களுக்குக் கிடைக்கும் பயன்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி கருத்திட்டம் அமுல்படுத்தப்படுமாயின், அமுல்படுத்தப்படுகின்ற காலஎல்லை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-19

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks