E   |   සි   |  

 திகதி: 2015-12-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0197/2015: Sri Lanka Insurance - employees who lost jobs during 2003 privatization

197/ '15

கௌரவ விஜித ஹேரத்,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2003 ஆம் ஆண்டு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் போது அதில் பணியாற்றிய 3100 ஊழியர்களில் சுமார் 1500 போ் தொழில்களை இழந்தனர் என்பதையும்;

(ii) ஏதேனும் நிறுவனமொன்று 'பர்க்' நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும் போது ஊழியர்களுக்கு உரித்தாக வேண்டிய 10% நலனையும் இவர்கள் இழந்தார்கள் என்பதையும்;

(iii) உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பின்படி கடந்த ஆட்சிக்காலத்தில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மீண்டும் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட போதிலும் தொழில் இழந்த ஊழியர்கள் அனைவரும் மீண்டும் சேவையில் அமர்த்தப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மீண்டும் தொழில் கிடைக்காத காரணத்தினால் அநீதிக்கு உள்ளான ஊழியர்களுக்கு தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-04

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks