E   |   සි   |  

 திகதி: 2015-12-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0195/2015: Land for resettled people in Bogaswewa , Vavuniya

195/ '15

கௌரவ விஜித ஹேரத்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வவுனியா மாவட்டத்தின் போகஸ்வெவ வலயத்தில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 312 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இவர்களுக்கு 1 ஏக்கர் உலர் நிலமும் 1 ஏக்கர் வயற்காணியும் பெற்றுக்கொடுக்க உத்தேசமாயிருந்தது என்பதையும்;

(iii) தற்போது 3 வருடங்கள் கடந்துள்ள போதிலும், மேற்கூறப்பட்டவாறு காணியெதுவும் வழங்கப்படவில்லையென்பதையும்;

(iv) தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் இவர்கள் மிகவும் நிர்க்கதியான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இந்த நிலைமையை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கைகளை எடுப்பாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-01

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks