02

E   |   සි   |  

 திகதி: 2015-11-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0172/2015: தென் மாகாணத்திலுள்ள தொழில்வாய்ப்பற்ற பயிற்றப்பட்ட ஆசிரியர்கள்: ஆட்சேர்ப்பு

172/ '15

 

கௌரவ டலஸ் அழகப்பெரும,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2011.03.29 ஆம் திகதிய பொது மனுக் குழுவின் முடிவுக்கமைய, தொழில்வாய்ப்புகளற்ற பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அரச பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு தென் மாகாண கல்வித் திணைக்களம் முறைசார்ந்த நேர்முகப் பரீட்சைகளை நடாத்தி, 06 பெயர்ப் பட்டியல்க​ளை 2011.05.03 ஆம் திகதியன்று நிரல் மத்திய அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளதென்பதையும்;

(ii) மேற்படி 06 பட்டியல்களில், 04 பட்டியல்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களுக்கு மாத்திரம் நியமனங்களை வழங்க நிரல் அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) எஞ்சியுள்ள 02 பெயர்ப் பட்டியல்களில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்கள் அரச பாடசாலை ஆசிரியர்களாக ஆட்சேர்க்கப்படும் திகதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-26

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-26

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks