04

E   |   සි   |  

 திகதி: 2017-09-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0120/2017: புற்றுநோய் ஒழிப்பு: வேலைத்திட்டம்

கௌரவ புத்திக பத்திறண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையர்கள் புற்று நோய்க்கு இரையாகக்கூடிய போக்கு அதிகரித்துக் காணப்படுகின்றதென்பதையும்;

(ii) இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை முறைசார்ந்ததொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்;

(iii) இதன் காரணத்தினால் நாட்டின் மனித வளமும் அதேபோன்று பணமும் அழிவடைகின்றதென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?

(ஆ) (i) தற்போது இலங்கையில் அதிகளவில் காணப்படுகின்ற புற்று நோய்கள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி நோய்கள் ஏற்படுவதற்கு ஏதுவான பிரதானமான காரணங்கள் ஒவ்வொரு நோய்க்கமைய வெவ்வேறாக யாவை என்பதையும்;

(iii) அக் காரணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அது எந்த விதத்தில் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) கடந்த 05 ஆண்டுகளில் புற்று நோயாளர்களின் சிகிச்சைகளுக்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட பணத்தொகை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) கடந்த 05 ஆண்டுகளில் புற்று நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட பணத்தொகை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-20

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-09-20

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks