பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
95/ ’15
கௌரவ புத்திக பத்திறண.— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சேனைப் பயிர்செய்கை, விலங்குகளை வேட்டையாடுதல் அத்துடன் பல்வேறு அவிவிருத்தி திட்டங்கள் காரணமாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குரிய வனங்களுக்கு சேதம் விளைகின்றதென்பதையும்;
(ii) உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக இத்தகைய சேதங்களை தடுத்து நிறுத்த இயலாதுள்ளதென்பதையும்;
(iii) மேற்படி வனங்கள் சேதமடைதலானது முழுமொத்த இலங்கையிலும் காலநிலை, பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான தாக்கங்களை விளைவிக்கின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) கடந்த இரண்டு ஆண்டு காலத்தினுள் இக்காடுகளில் வேட்டையாடுதல் மற்றும் சேனைப் பயிர்செய்கையில் ஈடுபடுதல் தொடர்பாக சட்டத்தின் முன் தவறாளிகளாகியவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) ஒதுக்கங்களில் வேட்டையாடுவதையும் சேனைப் பயிர்செய்கைகளில் ஈடுபடுவதையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) ஒதுக்கங்களின் பாதுகாப்பிற்காக தற்போதுள்ள மனித மற்றும் பௌதீக வளங்கள் பற்றி திருப்தியடைகின்றாரா என்பதையும்;
(ii) இன்றேல், ஒதுக்கங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-03-10
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-05-05
பதில் அளித்தார்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks