04

E   |   සි   |  

 திகதி: 2015-12-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0032/2015: Development of Highways Matara District 2014

32/ '15

 

கௌரவ புத்திக பத்திறண,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மாத்தறை மாவட்டத்தில் பல கிராமிய வீதிகள் சீரழிந்த நிலையில் உள்ளனவென்பதையும்;

(ii) இதனால் அம்மக்கள் பெருஞ்சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனரென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) 2014 ஆம் ஆண்டில் மாத்தறை மாவட்டத்தின் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு;

(ii) அப் பணத்தொகையைக் கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகள் யாவை;

(iii) மேற்படி ஒவ்வொரு வீதிக்கும் செலவிடப்பட்ட பணத்தொகை தனித்தனியாக எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மாத்தறை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படாத வீதிகள் பற்றிய மதிப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில் அவ்வீதிகள் யாவை;

(iii) அவ்வீதிகள் இறுதியாக புனரமைக்கப்பட்ட திகதி தனித்தனியாக யாது?

(iv) அவ்வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா;

(v) ஆமெனில், அத்திட்டங்களை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-19

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks