04

E   |   සි   |  

 திகதி: 2015-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0029/2015: Kuragala Shrine - stoppage of Excavations

29/ '15

 

கௌரவ புத்திக பத்திறண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சப்பிரகமுவ மாகாணத்தில், மிகவும் முக்கியமான பௌத்த வழிபாட்டுத் தலமாகிய கூரகல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளல் நிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கூரகல புனிதத் தலத்திற்கு சொந்தமான காணியின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி நிலப்பரப்பின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) அகழ்வுகளின் மூலம் கிடைத்த தொல்பொருட்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) கூரகல புனிதத் தலத்தின் பௌத்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) மேற்படி அகழ்வுகளை இடையறாமல் மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அத்திகதி எப்போதென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-22

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks