பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2010-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0056/2010: Closed primary school at Agunakolapalassa.

0056/ ’10

கெளரவ சஜித் பிரேமதாச,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை கல்வி வலயத்திற்குட்பட்ட அங்குணுகொலபெலஸ்ஸ கோட்டக்கல்வி காரியாலயத்தினால் மேற்பார்வை செய்யப்படும் தஹஅமுண மற்றும் ஹுன்னக்கும்புர ஆகிய ஆரம்ப பாடசாலைகள் 03 ஆண்டு காலமாக மூடப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி இரண்டு பாடசாலைகளைக் கொண்டு நடத்துவதற்காக நிர்மாணிக் கப்பட்ட கட்டிடங்களின் தற்போதைய நிலை என்ன வென்பதையும்,

(ii) அப்பாடசாலைகளை நிர்மாணிப்பதற்கென செலவு செய்யப்பட்ட பணத்தின் தற்போதைய பெறுமதி எவ்வளவென்பதையும்,

(iii) மேற்படி பாடசாலைக் கட்டடங்கள் அழிவடைந்தால் அந்த இழப்பை ஏற்பது யார் என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இக்கட்டடங்களை வேறொரு கருமத்திற்காகப் பயன்படுத்த அவர் நடவடிக்கை எடுப்பாரா,

(ii) மேற்படி கட்டடங்களைப் புனரமைத்து பயன்பாட்டிற்கு எடுக்காவிடின், வேறு நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக கட்டிடங்களையும் நிலத்தையும் விடுவிக்க உடன்படுகிறீர்களா

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-08

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks