01

E   |   සි   |  

 திகதி: 2013-12-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

4077/2013: கிளிநொச்சி மாவட்ட நெற்செய்கை பாதிப்பு : நிவாரணம்

4077/ ’13

கௌரவ எஸ். சிறீதரன்,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2012 ஆம் ஆண்டில் சிறுபோகத்தின்போது ஏற்பட்ட வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நெற் செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு யாதென்பதையும்;

           (ii)     மேலே குறிப்பிட்டுள்ளவாறு, நெற் செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

(iii) 2012-2013 காலப்பகுதியில், கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போகத்தின் போது வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வயற்காணிகளின் அளவு எத்தனை ஏக்கர் என்பதையும்;

(iv) வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு யாதென்பதையும்;

(v) மேற்படி விவசாயிகளின் நெற் செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக இதுவரை நிவாரணம் வழங்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-18

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-18

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks