E   |   සි   |  

 திகதி: 2026-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1981/2026: Damage caused by cyclone Ditwa in Kandy District

கௌரவ (சட்டத்தரணி) அனுராத ஜயரத்ன,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)   கண்டி மாவட்டத்தில்  —

          (i)      தித்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பிரதான அனர்த்தங்கள் யாவை என்பதையும்;

          (ii)      மக்களின் காணி இழப்புகள், சேதமடைந்த வீடுகள் மற்றும் சேதமடைந்த வணிக நிறுவனங்கள் பிரதேச செயலக வாரியாக வெவ்வேறாக யாவை என்பதையும்;

(iii) சேதமடைந்த மதத் தலங்கள் மற்றும் மேற்படி சேதங்களின் நிதிப் பெறுமதி வெவ்வேறாக யாவை என்பதையும்;

(iv) வீடுகளை இழந்ததால் வாடகை வீடுகளில் வசிப்போர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(v) வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு செலுத்தப்பட்டுள்ள மொத்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;

(vi) சேதமடைந்த வீடுகளுக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கையும் இன்றளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அத்தகைய திட்டங்களின் எண்ணிக்கையும் யாவை என்பதையும்;

(vii) இன்றளவில் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(viii) உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின், கம்பளை நகரில் வணிக நிறுவனங்கள் சேதமடைந்துள்ள வர்த்தகர்களில் இன்றளவில் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2026-05-19

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks