பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1493/2025
கௌரவ (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1989.07.11 ஆம் திகதிய, 566/5 இலக்க வர்த்தமானி அறிவித்திலின் பிரகாரம், பொல்பிதிகம பிரதேச செயலக பிரிவில், வனசீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளின் பரப்பளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டபோது அக்காணிகளில் இருப்பாட்சிக் காணிகள், வதிவிடக் காணிகள் மற்றும் அரசாங்க அளிப்புப் பத்திர காணிகள் உள்ளடங்கியிருந்தனவா என்பதையும்;
(iii) அத்தகைய காணிகள் நிள அளவை செய்யப்பட்டு அடையாளங் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) ஹக்வட்டுனாவ நீர்த்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க ஒதுக்கங்கள் நில அளவை செய்யப்பட்டு எல்லைகள் குறிப்பீடு செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் மேற்படி வனசீவராசிகள் வலயத்திற்கு பாதைகள், மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) இந்த வலயத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் விகாரைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iii) ஹேரத்கம வனப்பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்களினால் அரச காணிகள் (ஆட்சி மீளப் பெறுதல்) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) தனி நபர்கள் இருப்பாட்சி கொண்டுள்ள / வதிகின்ற காணிகளை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-11-14
கேட்டவர்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத், பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks