E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1315/ 2025 - கௌரவ கே.காதர் மஸ்தான், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1315/2025
      கௌரவ கே.காதர் மஸ்தான்,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் 1458 எனும் இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு கைத்தொழில் பேட்டை உள்ளது என்பதையும்;
      (ii) அதில் ஒரு சில காணித் துண்டுகள் காடாக மாறியுள்ளன என்பதையும்;
      அவர் அறிவாரா?
      (ஆ) (i) மேற்படி கைத்தொழில் பேட்டையில் உள்ள மொத்தக் காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாது;
      (ii) மேற்படி காணித் துண்டுகளில் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றும் இதுவரை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படாதுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
      (iii) தற்போது தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் உரிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றனவா;
      (iv) தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை பயன்படுத்தப்படாதுள்ள காணித் துண்டுகளை, பிற தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்க முடியுமா;
      (v) ஆமெனில், அவ்வாறு வழங்கக்கூடிய காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாது;
      (vi) தமது நிதியைப் பயன்படுத்தி, மேற்படி கைத்தொழில் பேட்டையினால் இறுதியாக அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை;
      (vii) மேற்படி கைத்தொழில் பேட்டை உச்சளவு ஆற்றலுடன் இயங்கி வருகிறதா;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-11

கேட்டவர்

கௌரவ கே.காதர் மஸ்தான், பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks