E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1090/ 2025 - கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1090/2025
      கௌரவ (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) மாத்தறை, தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தில் 17 வகுப்பறைகளும், வேறு முக்கியமான அலுவலகங்களும் இயங்கி வந்த மூன்று மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள 02 வகுப்பறைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் மண் மேடு சரிந்து விழுந்தமையால் அக்கட்டடம் பாவனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என்பதையும்;
      (ii) அதன் காரணமாக மேற்படி பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும்;
      அவர் அறிவாரா?
      (ஆ) (i) கடந்த காலத்தில் மேற்படி கட்டடத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததா என்பதையும்;
      (ii) அக்கட்டடத்தை மறுசீரமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
      (iii) சம்பந்தப்பட்ட நிலப்பகுதியைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-07

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks