E   |   සි   |  

 திகதி: 2025-03-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0510/2025: சணச அபிவிருத்தி வங்கி: "உத்தமாசார" கடன் திட்டம்

510/2025

கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சணச அபிவிருத்தி வங்கி, இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குறுத்தலுக்கு உட்பட்டதா;

(ii) சணச அபிவிருத்தி வங்கி மூலம் ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் களுக்கு "உத்தமாசார" என்ற பெயரில் கடன் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா;

(iii) அதன் கீழ் இதுவரை கடன் வழங்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தக் கடன் தொகை யாது;

(iv) 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை கடன் வழங்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தக் கடன் தொகை யாது;

(v) கடன் வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படுகின்ற ஓய்வூதிய சம்பள வீதம் யாது;

(vi) கடனை மீளச் செலுத்துவதற்கான குறைந்தபட்ச மற்றும் உச்சளவான காலஎல்லை யாது;

என்பதை அவர் தொிவிப்பாரா?

(ஆ) (i) கொவிட்-19 தொற்றுக் காலத்தில் கடனை அறவிட்டுக் கொள்ளும் காலஎல்லை நீடிக்கப்பட்டதன் மூலம் கடன் தொகையை விடவும் கூடுதலான தொகையை வட்டியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா;

(ii) மேற்படி கால நீடிப்பு வங்கியின் தற்றுணிவின் போில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா;

(iii) வங்கியின் தற்றுணிவின் போில் அவ்வாறு நீடிப்புச் செய்யப்பட முடியுமா;

(iv) அதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்களுக்கு நியாயம் நிலைநாட்டப்படுமா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-17

கேட்டவர்

கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-17

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks