logo

02

E   |   සි   |  

 திகதி: 2025-04-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0455/2025: ரைகம்புர கைத்தொழிற் பேட்டையில் நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட காணிகள்: தற்போதைய நிலை

455/2025
கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) ரைகம்புர கைத்தொழிற் பேட்டையில் கைத்தொழிலாளர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், இன்றளவில் வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு யாது என்பதையும்;
(iii) வழங்கப்பட்டுள்ள காணிகளில் தற்போது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு மற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படாத காணிகளின் அளவு வெவ்வேறாக யாது என்பதையும்;
(iv) இதுவரை பணிகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ள காணிகளில் பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(v) இதுவரை பணிகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ள காணிகளைப் பெற்றுள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ள நிதித்தொகை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி கைத்தொழிற் பேட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்வாகக் கட்டிடத்தின் தற்போதைய நிலை யாது என்பதையும்;
(ii) அந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் செலவு செய்துள்ள தொகை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-22

கேட்டவர்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-09

பதில் அளித்தார்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks