01

E   |   සි   |  

 திகதி: 2025-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0428/2025: மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகள்: பௌதிக வளங்கள் மற்றும் ஆளணியினர்

428/2025

கௌரவ இம்ரான் மகரூப்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை மாவட்டத்தின், மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளுக்கு 'ஏ' தரம் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) இருப்பினும், 'ஏ' தரத்திற்கு ஏற்றவாறு பௌதீக வளங்கள் இற்றைவரையில் இவ்வைத்தியசாலைகளுக்குப் வழங்கப்படவில்லை என்பதையும்;

(iii) மேற்படி வைத்தியசாலைகளுக்கு போதிய ஆளணி வழங்கப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வைத்தியசாலைகளுக்குத் தேவையான பெளதீக வளங்களை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;

(ii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் தற்போது கடமையாற்றிவரும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை;

(iii) மேற்படி வைத்தியசாலைகளின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

(iv) கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவராமைக்கான காரணங்கள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-08

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-08

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks