04

E   |   සි   |  

 திகதி: 2025-10-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0228/2025: ஊழல் ஒழிப்புக்கான மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், கொழும்பு: விபரம்

228/2024
கௌரவ அஜித் பி. பெரேரா,— நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊழல் ஒழிப்பு தொடர்பாக கொழும்பில் இயங்கும் வகையில் தாபிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் தாபிக்கப்பட்ட சட்டம் யாதென்பதையும்;
(ii) மேற்படி நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iii) மேற்படி நீதிமன்றத்தில் தற்போது விசாரணை செய்யும் வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் மேற்படி நீதிமன்றத்தில் விசாரணைசெய்து நிறைவு செய்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iv) ஆரம்பிக்கப்பட்ட திகதி முதல் இதுவரையில் மேற்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஊழல் ஒழிப்பு மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை ஆரம்பித்தல் மற்றும் நடாத்திச்செல்லுதல் செயலிழந்துள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) இலஞ்சம், நிதிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடி வழக்குகளைத் துரிதமாக விசாரணை செய்து நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-10

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2026-02-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks