01

E   |   සි   |  

 திகதி: 2025-01-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0070/2025: மட்டக்களப்பு, சீ-நோர் வீடமைப்புத் திட்டம் : உரித்து உறுதிகளை வழங்குதல்

70/2024

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1982 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் – பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுவன்கேணி – 2 பிரதேசத்தில் சீனோர் வீடமைப்புத் திட்டம் என்ற பெயரில் வீடமைப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதை அறிவாரா;

(ii) மேற்படி வீடுகள்/காணிகளுக்கான உரித்து உறுதிகள் இதுவரை வழங்கப்படாததால், அவற்றில் வசிப்பவர்கள் அந்த வீடுகள்/காணிகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதையும் அறிவாரா;

(iii) ஆமெனில், அந்த வீடுகள்/காணிகளுக்கு உரித்து உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(iv) எக்காலப்பகுதியில் அந்த உறுதிகள் வழங்கப்படும் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-24

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-05

பதில் அளித்தார்

கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks