பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3170/2023
கௌரவ தயாசிறி ஜயசேக்கர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பாடசாலை தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் ஒப்படைகள் போன்றவற்றை அச்சிடுவதற்கான செலவினங்கள் தற்போது பெற்றோரிடமிருந்து அறவிடப்படுகின்றன என்பதையும்;
(ii) தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த செலவினங்களைத் தாங்கிக்கொள்வது பெற்றோருக்கு கடினமாக உள்ளது என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) அரசியலமைப்பின் பிரகாரம் சகல ஆட்களுக்கும் கல்வியில் சமத்துவமான மற்றும் சமமான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை மேற்படி அறவீடு காரணமாக மீறப்படுகின்றதா என்பதையும்;
(ii) அச்சு நடவடிக்கைகளுக்கான செலவினத்தை பெற்றோரிடமிருந்து அறவிடுவதைத் தவிர வேறு தீர்வு அதிபர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு இல்லையென்பதை அறிவாரா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி அறவீடுகள் தொடர்பில் அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதையும்;
(iv) இந்த நிலைமை காரணமாக, பாடசாலை பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதை மட்டுப்படுத்துவதற்கு அல்லது நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-06-08
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-06-08
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks