04

E   |   සි   |  

 திகதி: 2023-05-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

3103/2023: பதில் கடமையாற்றும் அதிபர்கள்: நிரந்தர சேவைக்குள் உள்ளீர்த்தல்

3103/2022

கெளரவ சிவஞானம் சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) (i) பதில் கடமையாற்றுதல் அடிப்படையில் நாடெங்கிலும் அமைந்துள்ள பாடசாலைகளில் பணியாற்றுகின்ற அதிபர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) அவர்கள் மத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றுகின்ற அதிபர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பதில் கடமையாற்றுதல் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள அதிபர்களுக்கு சம்பள அதிகரிப்புகள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி அதிபர்களுக்கு சம்பள அதிகரிப்புகள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;

(iii) பொதுச் செயன்முறையின் கீழ் பதில் கடமையாற்றும் அடிப்படையில் பணியாற்றுகின்ற அதிபர்கள் நிரந்தரச் சேவைக்குள் உள்ளீர்க்கப்படுகின்ற போதிலும் தற்பொழுது இவர்களை நிரந்தரச் சேவைக்குள் உள்ளீர்க்கப் படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி அதிபர்களை நிரந்தரச் சேவைக்குள் உள்ளீர்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-11

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-06-08

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks