04

E   |   සි   |  

 திகதி: 2023-05-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

3090/2023: கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாண நகரங்களின் அபிவிருத்திக் கருத்திட்டம்: தாமதம்

3090/2023

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வெளிநாட்டு உதவிகளின் மீது கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதிகள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு நகரத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக உதவி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த சர்வதேச அமைப்புகள் யாவை என்பதையும்;

(iii) மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நகரத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்படி ஒவ்வொரு நகரத்தினதும் அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்படவிருந்த திகதி யாதென்பதையும்;

வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி நகர அபிவிருத்திக் கருத்திட்டம் தாமதமடைவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் யாவை என்பதையும்;

(ii) அக்கருத்திட்டம் தாமதமடைந்ததன் காரணமாக இழக்கப்பட்ட உதவித் தொகை எவ்வளவென்பதையும்;

(iii) உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களை உரிய காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-10

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-06-08

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks