01

E   |   සි   |  

 திகதி: 2012-11-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

2315/2012: ஊழியர் சேமலாப நிதிமூலம் கட்டிட நிர்மாணம் : மொத்தச் செலவு

2315/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,— தொழில், தொழில் உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      1958 ஆம் ஆண்டின் ஊழியர் சேமலாப நிதியச் (EPF) சட்டம் 2012 சனவரி 18ஆம் திகதியன்று திருத்தப்பட்டமையையும்;

          (ii)     காணி கொள்வனவு செய்வதற்கும் கட்டிடமொன்றை நிர்மானிப்பதற்கும் ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள பணத்தை உபயோகப்படுத்தக்கூடியவாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) மேற்சொன்ன கட்டிடத்திற்கென மதிப்பீடு செய்யப்பட்ட மொத்தச் செலவினத்தையும்;

(ii) அக்கட்டிடத்தின் ஒரு சதுர அடிக்கு மதிப்பீடு செய்யப்பட்ட செலவினத்தையும்;

(iii) அக்கட்டிட நிர்மாணத்திற்குக் கோரப்பட்ட கேள்விப்பத்திரங்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு கேள்விப் பத்திரதாரரினதும் வினைமனுப் பெறுமதி ஆகியவற்றை வெவ்வேறாகவும்;

(iv) அக்கட்டிடத்தின் தேவைப்பாட்டை 35 மாடிகளாக திட்டமிடலுக்குப் பொறுப்பாகவிருந்த நபரையும்

அவர் கூறுவாரா?

(இ) (i) கட்டிட நிர்மாணங்களில் ஊழியர் சேமலாப நிதியம் ஏன் வீண்விரயம் செய்யப்படுகின்றதென்பதையும்;

(ii) மேற்படி பணிக்காக அரச நிதியங்கள் பயன்படுத்தப்படாமைக்கான காரணத்தையும்

அவர் கூறுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-28

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

தொழில், தொழில் உறவுகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ගාමිණී ලොකුගේ මහතා

(மாண்புமிகு காமினி லொக்குகே)

(The Hon. Gamini Lokuge)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)          (i)      ඔව්.

                         1958 අංක 15 දරන සේවක අර්ථසාධක අරමුදල් පනත 2012.01.18 දින සංශෝධනය කරන ලදී.

              (ii)      ඔව්.

                         එම සංශෝධනය සිදු කර ඇත්තේ, ගොඩනැඟිල්ලක් ඉදි කිරීමට හා තවත් අරමුණු කීපයක් ඉටු කිරීම උදෙසාය.

(ආ) (i) රුපියල් බිලියන 7.5යි

(ii) වර්ග අඩියක් සඳහා දළ වශයෙන් රුපියල් 11,845.00යි.

(iii) ගොඩනැඟිල්ල ඉදි කිරීමට‍ අදාළ ටෙන්ඩර් කටයුතු අවසන් කර නොමැති බැවින් මේ අවස්ථාවේදී පිළිතුරු ලබා දිය නොහැක.

(iv) කම්කරු හා කම්කරු සබඳතා අමාත්‍යාංශය මඟින් ගත් ප්‍රතිපත්තිමය තීරණයක් මත හා අමාත්‍ය මණ්ඩලයේ අනුමැතිය මත මෙය සිදු කරන ලදී.

(ඇ) (i) මෙමඟින් නාස්තියක් සිදු නොවේ.

(ii) මෙය සේවක අර්ථසාධක අරමුදල් කටයුතු සඳහා ඉදි කරනු ලබන ගොඩනැඟිල්ලක් වන අතර, සේවක අර්ථසාධක අරමුදල පවත්වාගෙන යාමේ වියදම් එම අරමුදල විසින් දැරිය යුතු බවට සේවක අර්ථ සාධක අරමුදල් පනතෙහිද සඳහන්ව ඇත. ඒ අනුව රාජ්‍ය මුදල් යෙදවීම අවශ්‍ය නොවනු ඇත.

(ඈ)    පැන ‍නොනඟී.

 

 

பதில் தேதி

2013-04-23

பதில் அளித்தார்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks