01

E   |   සි   |  

 திகதி: 2023-05-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

2530/2023: கிண்ணியா, மூதூர், வெருகல், தம்பலகாமம் மற்றும் குச்சவெளியிலுள்ள அரச காணிகள்: குடியிருப்பாளர்களுக்கான உரித்து உறுதிகள்

2530/2023

கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிண்ணியா, மூதூர், வெருகல், தம்பலகாமம் மற்றும் குச்சவெளி ஆகிய ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் அரச காணிகளில் குடியிருக்கும் காணி உரித்து உறுதிகளைக் கொண்டிராத குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

(ii) மேற்படி ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் அரச காணிகளில் குடியிருக்கும், உரித்து உறுதிகள் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

(iii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமா;

(iv) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-23

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-07-20

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks