04

E   |   සි   |  

 திகதி: 2013-03-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

2266/2013: இபோச சாரதி திரு. கே.கே. எட்வின்: ஓய்வூதிய நலவுரித்துகள்

2266/ ’12

கெளரவ புத்திக பதிரண,— போக்குவரத்து  அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    கொட்டவில, கம்புறுகமுவ என்ற விலாசத்தில் வசிக்கும் திரு கே. கே அட்வின்,

           (i)     இலங்கை போக்குவரத்து சபையில் (இபோச) நிரந்தர பயிற்சிபெற்ற சாரதியாக 1965 ஆம் ஆண்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு வரை சேவையாற்றியுள்ளர் என்பதையும்;

(ii) ஓய்வு பெற்ற பின்னரும் 1986 ஆம் ஆண்டிலிருந்து 1994  ஆம் ஆண்டு வரை ஒப்பந்த அடிப்படையில் சாரதியாக மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார் என்பதையும்;

(iii) இதுவரை இவருடைய சேவைக்காலத்தின் பிரகாரம் இவருக்கு உரித்தாக வேண்டிய ஊழியர் சேமலாப நிதிய அனுகூலங்கள், பணிக்கொடைத் தொகை மற்றும் வேறெந்தவொரு கொடுப்பனவும் செலுத்தப்படவில்லை என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) இலங்கை போக்குவரத்துச் சபையினால் திரு அட்வினுக்கு செலுத்தப்பட வேண்டியுள்ள ஊழியர் சேமலாப நிதிய அனுகூலங்கள், பணிக்கொடைத் தொகை மற்றும் இதர கொடுப்பனவுகளின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

(ii) உடல் ரீதியாக பலவீனமான நிலையில் இருக்கும் திரு. அட்வினுக்கு மேற்படி தொகையை செலுத்துவதற்கும் இருபது வருடங்களுக்கு மேலாக இபோசவினால்  தடுத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி தொகைக்கான வட்டித் தொகையொன்றை செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-22

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-03

பதில் அளித்தார்

கௌரவ குமார வெல்கம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks