04

E   |   සි   |  

 திகதி: 2023-04-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1798/2023: Lands for people effected by Muthukandiya Irrigation project

1798/2023

கௌரவ குமாரசிறி ரத்நாயக்க,—  நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ, முத்துகண்டிய நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

           (ii)    மேற்படி நீர்த்தேக்கத்தை நிர்மாணித்ததன் விளைவாக அப்பிரதேசத்தில் காணப்பட்ட பண்டைய கிராமங்கள் சிலவற்றில் வாழ்ந்து வந்த மக்கள் தமது வாழ்விடங்களை இழந்தனர் என்பதை அறிவாரா என்பதையும்;

(iii) மேற்படி மக்களுக்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், மேற்படி ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(v) அவர்களுக்கு வழங்கப்பட்ட நட்டஈட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி (அ) (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள மக்களுக்கு மத்தியில் எவ்வித நட்டஈட்டுத் தொகையும் கிடைக்காத சில ஆட்கள் உள்ளனர் என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) அவர்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(iv) ஆமெனில், அவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-04-04

கேட்டவர்

கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks