04

E   |   සි   |  

 திகதி: 2023-08-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1330/2023: Branches of Bank of Ceylon in Anuradhapura district

1330/2023

கௌரவ இஷாக் ரஹுமான்,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள இலங்கை வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

           (ii)    2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மேற்படி கிளைகளினால் 5 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்டதாக கடன் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நபர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

(iii) குறித்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட கடன் தொகைகளில் இன்றளவில் அறவிட்டுக் கொள்ள முடியாது போயுள்ள கடன் தொகையின் அளவு எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி கடன் தொகையை அறவிட்டுக் கொள்வதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

(v) மேலே (iii) இல் குறிப்பிடப்பட்ட கடன் தொகைகளுக்கு மத்தியில் அறவிட முடியாக் கடனாக பதிவழிக்கப்பட்டுள்ள கடன் தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-08-24

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks