01

E   |   සි   |  

 திகதி: 2023-05-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0851/2023: மாகாண சபைகள்: காணி அதிகாரம்

851/2023

கௌரவ காமினி வலேபொட,— சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்தின் பிரகாரம், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு அளிக்கப்பட வேண்டுமென தற்போதைய அரசாங்கத்தின் பிரதானிகள் தெரிவித்துள்ளார்கள் என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) இன்றளவில் மத்திய அரசாங்கத்துக்குரிய காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒரு மாகாணத்தில் வசிக்கும் குடியிருப்பாளரொருவர் இன்னுமொரு மாகாணத்திலுள்ள காணியொன்றைக் கொள்வனவு செய்யும்போது பின்பற்ற வேண்டியுள்ள புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் யாவை என்பதையும்;

(iv) அவ்வாறான நிலைமையில் தமது மாகாணத்திலுள்ள காணிகளை வெளிநாட்டவருக்கு அல்லது வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பனை செய்வதற்கோ அல்லது குத்தகைக்கு வழங்குவதற்கோ யாதேனுமொரு மாகாண சபைக்கு அதிகாரம் கிடைக்குமா என்பதையும்;

(v) மாகாண சபையொன்றுக்கு அதன் தற்றுணிபின் படி மேற்படி அதிகாரங்களை நிறைவேற்றிக்கொள்ள உரிமை கிடைக்குமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-26

கேட்டவர்

கௌரவ காமினி வலேபொட, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-08-08

பதில் அளித்தார்

கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks