04

E   |   සි   |  

 திகதி: 2023-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0831/2023: இல. 746-இந்திரிலிகொட கிராம அலுவலர் பிரிவின் பாடசாலை வீதி: 'காப்பட்' இடுதல்

831/2023

கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார்,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பேருவளை பிரதேச செயலாளர் பிரிவில், இலக்கம் 746-இந்திரிலிகொட கிராம அலுவலர் பிரிவின், பாடசாலை வீதியை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் அடிப்படைப் பணிகள் மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் களுத்துறை அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டன என்பதையும்;

(ii) அதற்கமைய, முதற் கட்டமாக மேற்படி வீதியில் கொன்கிறீட் கற்கள் இடப்பட்டன என்பதையும்;

(iii) தற்போது மேற்படி கொன்கிறீட் கற்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதன் காரணமாக வீதி சேதமடைந்து போக்குவரத்துக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்படுகின்றது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வீதியை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது என்பதையும்;

(iii) மேற்படி கருத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை யாது என்பதையும்;

(iv) மேற்படி அ (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் காரணமாக நிதி விரயமாகி இருப்பின், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய ஆட்கள் யாவர் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-07

கேட்டவர்

கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-04-27

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks