பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
684/2023
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலகத்துக்கென கணக்காளரொருவர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதையும்;
(ii) மேற்படி பிரதேச செயலகத்துக்கு கணக்காளரொருவரை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று, களுவாஞ்சிக்குடி மற்றும் போரத்தீவுபற்று ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளினதும் சனத்தொகை அதிகமென்பதால் மேற்படி ஒவ்வொரு பிரிவையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பதற்கு இன்றளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) இது தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-07
கேட்டவர்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks