01

E   |   සි   |  

 திகதி: 2013-03-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1968/2013: කිරිඳිගඟ හරහා පාලමක් ඉදි කිරීම : විස්තර

1968/’11

கெளரவ புத்திக பத்திரண,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     மொனராகலை மாவட்டத்தின் வெள்ளவாய பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மல்வத்தாவெல பாடசாலை வீதிக்கு அருகில் கிரிந்தி ஆற்றுக்கு குறுக்கே பல கிராமங்களை தொடர்புபடுத்தும் வகையில் பாலமொன்றை அமைப்பதற்கு அளவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்ட போதிலும் இற்றைவரை பாலம் அமைக்கப்படவில்லை என்பதையும்;

(ii) மேற்படி இடத்தில் பாலமொன்று இல்லாததால் பல கிராமங்களை சேர்ந்த மக்கள்  பெரும் கஷ்டத்திற்கு முகம்கொடுத்துள்ளார்கள் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பாலத்தை அமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) இதற்காக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி பணத்தொகை எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-19

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-03-19

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks