04

E   |   සි   |  

 திகதி: 2012-05-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1652/2012: மொனறாகலை மற்றும் பதுளை மாவட்டப் பாடசாலைகள்: கல்விசாரா ஊழியர்கள்

1652/ ’11

 

கௌரவ புத்திக பத்திரண,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மொனறாகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் பல வருடங்களாக இடைவிடாது சேவையில் ஈடுபடும் பாடசாலை கல்விசாரா ஊழியர்களின் சேவை இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை என்பதையும்;

(ii) 2005 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்க்கப்பட்ட இவர்கள் இதுவரை சிறியதொரு நாளாந்த சம்பளத்திற்கு சேவையாற்றுகின்றனர் என்பதையும்;

(iii) மேற்படி நிலைமையின் கீழ் இவர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றரென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கல்விசாரா ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ள நிலையிலும் இவர்களது சேவையை நிரந்தரமாக்காமலிருப்பதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி காரணங்களை தவிர்த்து இவர்களை நிரந்தர ஊழியர் குழாமில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) ஆமெனின், இதற்கு எடுக்கும் காலம் எவ்வளவென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-05-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-11

பதில் அளித்தார்

கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks