பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2011-05-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

1060/2011: Widen of Highways

1060/ ’11

கெளரவ வசந்த அலுவிஹாரே,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    மாத்தளை – ரத்தோட்டை வீதியை அபிவிருத்தி செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?

(ஆ)    (i)      மேற்படி வீதியை அபிவிருத்தி செய்வதற்கான நிலஅளவைப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வீதி வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்திற்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகை யாதென்பதையும்;

(iii) அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இவ்வீதியை விஸ்தரிக்கின்ற பணியின்போது,

(i) சுவீகரிக்கப்படும் காணிகளின் பரப்பளவு மற்றும் உடைத்தகற்றப்படும் வீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி காணிகள் மற்றும் வீடுகளை இழப்போரின் பெயர்களையும்;

(iii) மேற்படி ஆதனங்கள் சுவீகரிக்கப்படுகின்றமை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படாவிடின் அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) (i) மேற்படி வீதியை விஸ்தரிக்கின்றபோது சுவீகரிக்கப்படும்    ஆதனங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்பதையும்;

(ii) அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்;

(iii) குறித்த இழப்பீட்டுத்தொகை செலுத்தி முடிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

(iv) சுவீகரிக்கப்படும் காணிகளுக்காக மாற்றுக்காணிகள் வழங்கப்படுமா என்பதையும்;

(v) அவ்வாறாயின், குறித்த காணிகள் வழங்கப்படும் இடம் யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-05-20

கேட்டவர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks