04

E   |   සි   |  

 திகதி: 2020-11-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0455/2020: Wild Elephant threat to people in Medawachchiya Divisional Secretariat

455/2020

கௌரவ இஷாக் ரஹுமான்,— வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அனுராதபுர மாவட்டத்தின் மெதவச்சிய பிரதேச செயலகப் பிரிவின் முறையே 225, 226 மற்றும் 227 ஆம் இலக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கின்ற மக்கள் காட்டு யானைகள் அச்சுறுத்தல் காரணமாக தமது வாழ்விடங்களை கைவிட்டு வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதென்பதையும்;

(ii) மேற்படி பிரிவுகளில் வசிக்கின்ற மக்கள் யானைகள் தடுப்பு வேலியொன்றை நிர்மாணித்துத் தருமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ள போதிலும் இதுவரை அதற்கு தீர்வு கிடைக்கவில்லை யென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) ஆமெனில், இவ்விடயம் தொடர்பாக அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-19

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks